வியாழன், 1 மார்ச், 2018

History of SYRIAN WAR

                                               சிரியா 

 நீங்கள் வீட்டில்குடும்பத்துடன் உணவருந்தி கொண்டிருக்கிறீர்கள் திடீரென 
உங்கள் காலடியில் ஒரு வெடிகுண்டு வந்து விழுந்தால் என்ன செய்விர்கள் ?
அவ்வாறு எப்படி நடக்கும் என்று யோசிக்காதீர்கள் இன்று சிரியாவின் நிலை 
அதுதான்.குழந்தைகளும்,பெண்களும் குண்டுகளுக்கு பயந்து ஓடும் காட்சிகளையும்,போட்டோக்களையும் நாம் நம் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து 
பார்த்து கொண்டு உச்சுக்கொட்டி கொண்டிருக்கிறோம்.
தற்போது சிரியா வில் நடந்து வரும் உள்நாட்டு போர்  தீவிரமடைந்துள்ளது
இதற்கு காரணம்.அரசின் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐசிஸ் 
இடையே நடுக்கும் போர்தான் சிரியா உள்நாட்டு போர் .சிரிய  போர் அந்நாட்டின் தலைவர் பஷார் -அல் -அசாத் எதிராக தீவிரவாத அமைப்பு ஐசிஸ் கிளர்ச்சியாளர்க்கு கிடையேயான போர்   என்று கூறப்பட்டாலும் இதன் பின்புலம் வேறு.
1908

     ஆட்டோமேனியா துருக்கி (ottamon empire) தனது ஆட்சியின் கீழ் தற்போதைய செர்பியா,பல்ஜிரியா,அல்பேனியா,துருக்கி,கிரீஸ்,மாண்டிநீக்ரோ,பொசினியா,குரேவசியா,ஈரான்,ஈராக்,சவூதி அரேபியாவின் ஒரு சில பகுதிகள்,சிரியா நாடுகளை கொண்டிருந்தது.1908 துருக்கி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தலைவர் அஹ்மத் நியாஸ் பாய் ஆல் 200 இளைஞர்களுடன் 3 ரேஷன்களால்   இளந்துருக்கியர்புரட்சியை    மேற்கொண்டார் .



இந்த புரட்சி நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ண அவசர நிலையை உணர்ந்து கொண்ட சுல்தான் 1876ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் மீளுருவாக்கம் ,படைகளின் சீர்திருத்தம்,இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தார்.
இதனால் ஆட்டோமான் பேரராசு வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. 
1912 பால்கன் நாடுகளான செர்பியா,மண்டி நீக்ரோ ,பல்ஜிரியா,க்ரிஸ் மற்றும் அல்பேனியா நாடுகள் துருக்கியின் பலவீனத்தை அறிந்து தன சுதந்திரத்தை அறிவித்து கொண்டன.அதோடு துருக்கி யுடன் போர் செய்து ஆட்டோமெனின் துருக்கியின் பெரும் பகுதியை கைப்பற்றியது .இது ஆட்டோமெனின் துருக்கியின் வீழ்ச்சிக்கு மேலும் காரணமாயிற்று.
1916 அரபு புரட்சி சிரியா,ஈரான்,ஈராக்,சவூதி குடியரசை அறிவித்து கொள்ள உதவி புரிந்தது .முதல் உலக போருக்கு பின் ஆட்டோமான் பேரரசு முழுமையாக கவிழ்ந்தது.1922 ஆறாம் முகமது சுல்தான் நாட்டை விட்டு வெளியேற துருக்கி ஒரு முழு குடியரசு நாடாக உருவெடுத்தது.
20ம் நூற்றாண்டு பாதியில் ஈரான்,ஈராக்,சிரியா ,சவூதி அரேபியா நாடுகள் முன்னேற்றத்தை அடைய தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வளத்தை பயன்படுத்தி கொண்டன.மே 6 ,1908 பிரித்தானியா  கம்பெனி எண்ணெய் கிணறு ஒன்றை வெட்டி பெட்ரோலியம் எடுத்ததே எண்ணெய் வள வரலாறு துவக்கத்திற்கு காரணமாய் அமைந்தது .
மத்திய கிழக்கு நாடுகள் 1980ல் எண்ணெய்  வளத்தால் பெருமளவு வளர்ச்சியை சந்தித்தது.இதனால் 80களில் மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதாரம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக சென்றன .இது வல்லரசு நாடுகளான அமெரிக்கா ரஸ்யா வை சிக்கலுக்கு உள்ளாகியது.
வல்லரசு நாடுகளின் சூழ்ச்சி 
சவூதி அரேபியாவின் எண்ணெய்  வளத்தை சுரண்ட அதனை கைப்பற்றும் முடிவை அமெரிக்கா எடுத்தது.அப்போதைய சவூதி ரியாத் அமெரிக்காவுடன் நட்புறவை பேணா நினைத்தார் இதன்படி சவூதி அமெரிக்காவிற்கு ஆதரவு தந்தது அதனாலதான் இன்று வரை சவூதி எண்ணை உற்பத்தியில் இன்று வரை முதல் இடத்தில உள்ளது.சவுதியில் மன்னராட்சி முறை நடைபெறுவதால் மன்னரே எல்லா முடிவையும் எடுப்பர் இது அமெரிக்கா ஆதிக்க திட்டம் வெற்றி பெற உதவியது .சவூதியில் மன்னராட்சி முறை
என்பதால் மன்னர் எடுக்கும் முடிவே இறுதி இதனால் பிற அரசு அதிகாரிகளை கவர அமெரிக்க அரசுக்கு தேவை ஏற்படவில்லை.
பனிப்போர் (cold war )உச்சத்தில் இருந்த காலம் என்பதால் ஈரானிய  அரசு  ரஷ்யாவுடன் நட்பு மேற்கொண்டது.அதனால் அடுத்து ஆதிக்க சக்தியின் கண் ஈராக்கை நோக்கி திரும்பியது சவூதி கு அடுத்த 3ம் இடத்தில் எண்ணெய் உற்பத்தியில் ஈராக் வும் ஸிரியாவும் இருந்தன.தன்னுடன் நட்புறவை மேற்கொண்ட சவுதியின் நிலையை கட்டி இரு நாடுகளிலும் நுழைய பார்த்தது .ஈராக் சனநாயக நாடு என்பதால் அதன் அரசு அதிகாரிகளை அமெரிக்கா விலைக்கு வாங்கி அரசுக்கு எதிராகவே திருப்பியது.அந்நாட்டின் அப்போதைய அதிபர் சதாம் உசேன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை அமெரிக்கா வைத்தது.
அவர் நாட்டில் நியூக்ளியர் ஆயுதங்களை தனது நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ஐ.நா விடம் உசேன் ஒரு தீவிரவாதி அவரை பிடிக்கும் உரிமையை C.I.A விடம் ஒப்படைக்க கேட்டு கொள்ள நாட்டு ராணுவத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விட்டு சதாம் உசேன் அவைகளை சிறை பிடித்தனர் .இதற்கு முன்னேரே நாட்டின் நிலவரத்தை கருத்தில் கொண்டு 2003ல் அதிபர் பதவியில் இருந்து விலகினார்.இதனால் 2006ல் சட்டம் உசேனை தூக்கில் போட்டனர்.ஆனால் ஒரு ஆயுதம் கூட ஈராக் இடம்மிருந்து இன்று வரை கைப்பற்றவில்லை.
2011
அரபு ஸ்பிரிங்கின் துனிசியா வெற்றியால் பல அரபு நாடுகள் எழுச்சி பெற்றது .அரபு புரட்சி மக்கள் சமூக வலை தளங்களால் இணைந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக போராடி வெற்றி பெற்றது.
அமெரிக்கா சிரியாவில் செய்தது போன்றே அரசு அதிகாரிகளுக்கு பணத்தை காட்டி அதிபர் பஷார் அல் -ஆசாத் கு எதிராக திருப்ப அவர்கள் அதிபருக்கு எதிராக போராட துவங்கினர்.சிரியா வை அமெரிக்கா தீவிரவாத நாடக அறிவித்தது.பிறகு அமெரிக்க ராணுவங்கள் கிளர்ச்சியாளர்க்கு ஆதரவாக போரிட போவதாக கூறி நாட்டை துவம்சம் செய்ய முயற்சிகளை மேற்கொள்ள.ஐசிஸ் இஸ்லாமியம் இஸ்லாம் நாடுகளுக்கே வேறு நாடுகள் தலை இட கூடாது என்று கூறி.அமெரிக்காவிற்கு எதிராக போர் செய்ய துவங்கியது.சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து அரசு சார்பாக போராடுகிறது.ஐசிஸ் யார் எதிரி என்றே தெரியாமல் ரஷ்யா அமெரிக்க இரண்டு ராணுவங்கள் இரண்டையும் தாக்கி வருகிறது.2014ல் போரை நிறுத்த UNO உத்தரவிட்டது.அனால் மறுபடியும் இந்த போர் எழுச்சி பெற்றது .
ஆயுத கலாச்சாரம் 
இந்த போரில் கெமிக்கல் வெடி குண்டுகள் அதிகம் பயன்படுத்த படுகிறது.கிளர்ச்சியாளர்களின் இடம் தெரியாததால் ராணுவம் மக்கள் குடியிருப்புகளிலே வெடிகுண்டுகளை வீசி செல்கிறது.எல்லை பகுதியில் சிறு அசைவு ஏற்பட்டாலும் துப்பாக்கி சூடு நடத்தப்படும்.ஹெலி கொப்டர்கள் வெடி குண்டு மழையை இட்டு செல்லும்.
இதனால் பல மக்கள் பாதிக்க பட்டனர் இன்றும் பாதிக்க படுகின்றனர்.இதனால் பல அகதிகள் நாட்டை விட்டு சென்றனர்.புலம் பெயருபோதும் பல மக்கள் உணவின்றி இறந்தனர்.ஒரு குழந்தை கடற் கரையில் இறந்து கிடந்த கட்சியை கண்டு நாம் கண்ணீர் சிந்தியதை மறக்க முடியுமா?

உலக நாடுகளின் பங்களிப்பு 
நீலம் -சிரியா அரசை ஆதரிப்போர் 
பச்சை-போராளிகளுக்கு ஆதரவு 
மஞ்சள்--பிளவு பட்ட ஆதரவு 
இறப்புகள் 
2014 கணக்கெடுப்பின் படி 1,91,369 பேர் இறந்துள்ளனர்.3,00,000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.அதே அளவு மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளி ஏறினார்.
பனி போர் 
உலக அரசியல் விமர்சகர்கள் இது ரஷ்யா அமெரிக்கா இடையே யானா பனி போர் அதற்காக சிரியா வை பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர்.சுருக்கமாக மொத்தத்தில் சிரியா வில் உள்ள எண்ணெய் வளம் யாருக்கு என்பதே இந்த போர் .
அமெரிக்காவின் சூழ்ச்சியால்தான் சிரிய உள்நாட்டு போர் உருவானது.போட்டி போட்டு கொண்டு ரஸ்யா அமெரிக்கா எண்ணெய் வளத்திற்காக மனித வளத்தை வெட்டியசைக்கிறது.
2018
வருட தொடக்கத்திலேயே மறுபடியும் போரை தொடங்க அதனால் மார்ச் 1 வரை ஆயிரம் பேர் இறப்பை சந்தித்துள்ளனர் .
இன்றைய சிரியா நிலை 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக